*
தொப்புள்
கொடி.
இந்த
அறைக்குப் பக்கத்தில் உள்ள அறையில்தான் அவளது தலைப்பிரசவம் நடந்தது. அதோ அந்த மூலையில்தான்
அந்த மூத்த மகளின் தொப்புள்கொடி புதைக்கப்பட்டது. முதன்முதலாக தாய்மையை உணரச் செய்த
மகளைக் கையில் ஏந்தி உச்சி முகர்ந்தது இந்த அறையில்தான். ஏறக்குறைய அவளது எல்லாக் குநை்தைகளையும்
இந்த அறையில்தான் பிசவித்தாள். அவளது எல்லாக் குழந்தைகளின் தொப்புள் கொடியும் இந்த
அறையின் மூலைகளில் தான் புதைக்கப்பட்டு இருக்கின்றன. தன் அந்திமக் காலத்தில் ஆதரவாக
இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பத்துக் குழந்தைகளை, பத்து மனித உயிர்களை இந்த அறையில்தான்
பெற்று எடுத்தாள். இன்று அந்த நினைவுகள் மட்டுமே சொந்தமாக, யாரும் இல்லாத தனிமரமாகப்
பெற்றெடுத்த அந்தப் புனிதக் கருப்பையின் வெறுமையுடன் நிற்கிறாள்.
ஆதாரம்
; தடம் – மார்ச் – 2017 இதழ். - இஸ்மத் சுக்தாய் – வேர்கள் – கதையிலிருந்து –
பக்கம் – 90.
தகவல்; ந.க.துறைவன்.
படித்து முடிக்கையில்
ReplyDeleteஎம்முள்ளும் வெறுமைக்கரும்புகை
பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்