தமிழ்நாட்டு
விவசாயிகள் டில்லியில் பல நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின்
இந்தப் போராட்டம் வடமாநில விவசாயிகளின் காதுகளுக்கு எட்டவில்லையா? . அவர்களுக்கும்
இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கத்தானே செய்கின்றன. அங்கிருக்கும் விவசாயிகள் சங்கம் என்ன
செய்கின்றன? இது எதோவொரு மாநில விவசாயிகளின் பிரச்சினையாகப் பார்க்காமல் ஒட்டு மொத்த
இந்திய விவசாயிகளின் பிரச்சினைகள் என்று ஏன் உணர்ந்துக் கொள்ள மறுக்கிறார்கள்? இதில்
அரசும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது என்பது வாக்களிக்கும் மக்களுக்கு செய்கின்ற துரோகமாகும்
அல்லவா! இன்னும் எத்தனை நாளைக்கு விவசாயிகள் இப்படியே போராடுவார்கள்? தலைநகரிலிருந்து
வேடிக்கைப் பார்க்கிறது இரக்கமில்லாத மத்திய அரசு
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment