1.
குடியை
எதிர்க்கிறார்கள் மக்கள்
குடியை
ஆதரிக்கிறது மக்கள் அரசு.
2.
உதிர்ந்த
இலைகள்
ஒன்று
சேருமா?
3.
தலைக்கு
வந்த தொப்பி
தலைக்குள்
மாட்டிகிட்டது.
4.
பல
ஆண்டு காலமாக வேலியே
பயிர்களை
மேய்ந்து வருகின்றன.
5.
எல்லா
துறையும் தூய துறையல்ல
வல்லமை
பெற்ற ஊழல் துறையே!
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment