வெயில்
படாமலிருக்க முகத்தை
மூடிக்
கொண்டு பாதையைப் பார்த்து
வாகனத்தில்
பறக்கிறாள்.
அவள்
யாரென்று தெரியவில்லை
அவளாகத்
தானிருக்குமோ? என்ற
சந்தேகம்
வேறு மனதில் வலுத்தது.
கண்களை
வைத்து எப்படிக் கண்டுபிடித்து
அழைப்பதென்று
மனக் குழப்பம்.
பயத்தை
நீக்கி தைரியமாய்
பெயர்
சொல்லி அழைத்தான்.
அவள்
சட்டென திரும்பி பார்த்தாள்.
அப்போதுதான்
தெரிந்தது அவனுக்கு
கண்களுக்கு
அழகை மறைக்கத்
தெரியாது
என்கின்ற ரகசியம்.
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment