1.
அத்தனைக்கும்
ஆசைபடு
அதிகமானால்
வேதனைபடு.
2.
உளறுபவன்
என்று பெயரெடுத்தவனிடம்
உண்மை
அறிய முடியாது.
3.
என்றேனும்
ஒருநாள் நடந்து விடுகிறது
தள்ளிப்
போன முக்கிய காரியங்கள்.
4.
செயல்படாதவர்கள்
என்று எவருமில்லை
எல்லோரும்
திறனோடு செயல்படுபவர்களே!
5.
எழுதுவதெல்லாம்
விமர்சனத்திற்குட்பட்டது
எழுதாதெல்லாம்
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.
6.
முற்றுப்
பெறுவதில்லை
முரண்படாத
வாழ்க்கை
ந.க.துறைவன்.
சிறந்த பதிவு
ReplyDeleteஅருமையான எண்ணங்கள்