1.
விழித்தெழுந்தால்
வேறு ஒரு நாள்!
விழித்தெழாவிட்டால்,
அது எந்தத் தேசத்தில் எந்தக் காலத்தில் எந்த
நாள் என்று இன்னும் யாரும் கண்டு சொல்லி விடவில்லை.
2.
மனிதத்
தன்மையை இழக்காமல் சரித்திர சோதனைகளுக்குக் கெல்லாம் ஈடுகொடுத்துக் கொண்டு ஓர் இந்தியா
நிற்கிறது. நூற்றுக்கணக்கான மாறுதல்களை, உருவம் அழியாமல ஏற்றுக் கொண்டு மீள்கிறது.
3.
மனிதன்
பேச்சால் தான் வாழ்கிறான்.
4.
மனிதன்
மனிதத்தன்மையை .இழக்காத எந்த இடமுமே புனிதமானது.
ஆதாரம்
; எழுத்தாளர் க.நா.சு – வின் – ஒரு நாள் – நாவல்.
தொகுப்பு
; ந.க.துறைவன்.
*
மனிதன் பேச்சால் தான் வாழ்கிறான்.
ReplyDeleteசிறந்த பகிர்வு