1.
நான் யார்?
*
நான் யார் தெரிகிறதா?
என்றான்
நான்
யார்? என்று
எனக்கே
தெரியவில்லை
உன்னை
எப்படி?
எனக்கு
தெரியும்?
2.
வலி…!!
*
மலரைப்
பறித்தவளுக்கு
அதன்
வலி தெரியவில்லை
இப்பொழுது
தான்
அவளுக்குப்
புரிந்தது
மனதைப்
பறித்தவன்
கொடுத்த
வலி.
*
No comments:
Post a Comment