*
1.
பசுவை
கொன்றால் ஆயுள் தண்டனை. ரூபாய்.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குஜராத்தில் புதிய
சட்டம்.
மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே
பறவைகள் விலங்குகள் என அனைத்தும் சாப்பிட்டு பழகியவன் மனிதன். யாரையோ அழிக்க வேண்டும்.என்ற நோக்கில் கொண்டு வரப்படும்
இச்சட்டம் அரசில் நோக்கம் கொண்டதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
2.
பழைய
குடும்ப அட்டைக்கு பதில் “ ஸ்மார்ட் கார்டு ” வழங்கும் திட்டம் முதல்வர் இன்று தொடங்குகிறார்.
உள்தாள் ஒட்டி ஒட்டி உப்பிப் போன
குடும்ப அட்டைக்கு இப்பவாச்சும் விடுதலை கிடைக்கிறதே? இதுவும் முழுமையா செயலுக்கு வருமா?
3.
பெண்ணின்
நுரையிரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம். பெங்களுரு அரசு மருத்துவர்கள் சாதனை.
மருத்துவ துறையின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது.
நல்வாழ்த்துக்கள்.
4.
சிறுசேமிப்பு
திட்டங்களின் வட்டி விகிதம் 0.1% குறைப்பு. மத்திய அரசு அறிவிப்பு.
பொதுமக்களின் வயிற்றில் அடிப்பதே
மத்திய அரசின் நிரந்தரக“ கொள்கையாக அமைந்திருக்கிறது.
ஆதாரம்
; தி இந்து – நாளிதழ் – 01-04-2017.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment