எழுத்தாளர்
அசோகமித்திரன்.
மூத்தப்
படைப்பாளி திரு. அசோகமித்திரன், தன் சிறுவயது காலத்து நினைவுகளை ஐதராபாத்தைக் களான
வைத்து பல கதைகள் படைத்தவர். குடும்ப உறவுகளின் நெருடல்களையும், மத்தியதர வர்க்கத்தின்
பாடுகளையும் தன் படைப்புகளின் வாயிலாக மனம் கனக்க சொன்னவர். அவரின் சிறுகதைகள், நாவல்கள்
கட்டுரைகள் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த பெரும் வெகுமதிகள். தமிழின் முன்னோடிகளில்
ஒருவராகத் திகழ்ந்தவர். இன்று அவர் நம்மிடையே இல்லையென்பது வருத்தத்திற்குரியது என்றாலும்,
அவரின் படைப்புக்கள் நம்மிடையே வெகு காலம் உயிர்வாழும். உரையாடும். அவரின் எழுத்தாளுமை
நினைவில் நின்று போற்றும்.
அசோகமித்திரன்
மறைவுக்கு எனது அஞ்சலி.
ந.க.துறைவன்.
*
கொஞ்சம் சராசரித்தனம் தாண்டிய
ReplyDeleteவாசகனுக்கு அவருடைய படைப்புகள்தான்
புகலிடலாமாய் என்றால் அதுமிகையில்லை
அவர் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய இயலாத இழப்பே..