1.
இந்தியாவில் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 88% மாணவ / மாணவியர்
பள்ளிக்கு கொண்டுசெல்லும் புத்தகச் சுமை, அவர்களது உடல் எடையில் 45% அளவுக்கு இருக்கிறது
என்று அண்மையில் ‘ அசோசெம் ‘ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புத்தகச் சுமையெ குழந்தைங்க தூக்கிட்டுப் போகும்போது
பார்க்கணுமே. நாமக்கே பாவமாயிருக்கும். அதுங்க முதுகு வளைஞ்சி. அப்பப்பா…???
2.
மக்களைவை நெறிகள் குழுவின் தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்.
மூத்த தலைவரை
திருப்திப்படுத்த ஒரு பதவி. அத்வானி இனிமே நிசப்தமானி.
3.
காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்.
65 வருஷமா காஷ்மீர்
பிரச்னை நடந்துகிட்டிருக்கு. வழக்கமாக, ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் வம்பு சண்டைக்கு
வரும்போதெல்லாம் அனைத்துக் கட்சிகள் கூடும் முடிவு காண முடியாம. நிர்ந்த முடிவு காண
வேண்டும் என்று கூறி விட்டு கலைந்து விடும்.
4.
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க இந்தியா தயாராகவில்லை.
மத்திய நிதியமைச்சர். அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய
வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு தானே இப்படி முழங்குகிறார் ஜேட்லி.
5.
சமஸ்கிருத மொழியில் ஐ.நா.சாசனம்
ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர். சையது அக்பருதீன் கட்டுரை ( டுவிட்டர்
) வலைதளத்தில் வெளிட்டுள்ளார்.
சமஸ்கிருத மொழி
திணிப்பின் இன்னொரு பரிமாணமாக இச்செய்தி வெளிவந்துள்ளது.
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment