எனக்கு
வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற்
சலன மில்லாமல்,
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும்
பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல் வேண்டும்.
கனக்கும்
செல்வம், நூறு வயது:
இவையும் தரநீ கடவாயே.
***
No comments:
Post a Comment