1.
உயிர்
தருவேன் என்றாய்
உயிரைப்
பறித்து கொண்டாய்.
2.
வாழும்போது
ஊஞ்சல் ஆடுகிறார்கள்.
சாகும்போது
ஊசலாடுகிறார்கள்.
3.
எல்லாமே
இயங்குகின்றது
யாருமே
இல்லாத சூன்யத்திற்குள்.
4.
அகநக
நட்பது நட்பன்று நெஞ்சத்து
முகநூல்
நட்பே நட்பு.
5.
பாதையில
மேடு பள்ளம்
நிரம்பி
வழிகிறது மழைவெள்ளம்.
*
No comments:
Post a Comment