1.
அமைச்சர்களின் சமோசா செலவு ரூபாய். 9 கோடி! உத்தரப்பிரதேச பேரவையில்
தகவல்.
உத்தரப் பிரதேச அமைச்சர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் தங்களைச்
சந்திக்க வருபவர்களுக்கு சமோசா, தேனீர், குலோப்ஜாமூன் உள்ளிட்டவை வாங்கிக் கொடுத்தற்காக
மட்டும் சுமார் ரூ. 9 கோடி செலவிட்டுள்ளனர்.
நம்ம வீட்லே ரெண்டு
பையன்களுக்கு பத்து ரூபாய்க்கு நாலு சமோசா வாங்கிக் கொடுக்கவே முடியலே. அரசு செலவிலே இத்தனைக் கோடி தின்கிறதுக்கு செலவு
செஞ்சிருக்காங்கப்பா. வாழ்க இந்திய பொருளாதாரம். வாழ்க இந்தியா.
2.
தெலுங்கானாவில் ரூ.500/- - க்கு ஒரு நாள் சிறைவாசம்.
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு முன்னாள் சிறைச்சாலை,
சுற்றுலா பயணிகளுக்கு சிறைவாசம் என்றால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தைத் தர காத்திருக்கிறது.
ரூ.500/- செலுத்தினால், ஒரு நாள் முழுவதும் தங்கி சிறைவாசத்தை அனுபவிக்கலாம்.
இந்தியாவிலேயே
முதன்முதலில் பொது மக்களுக்காக சிறை வாசம் அனுபவத்தை உணர்த்த இப்புதிய திட்டத்தை கொண்டு வந்து அறிமுகப்படுத்தியுள்ளது
தெலுங்கானா அரசு.
3.
சிங்கூர் டாடா நிறுவன நில ஒப்பந்தம் ரத்து. விவசாயிகளிடம் திருப்பித்
தர உச்ச நீதிமன்றம் உத்தரவு.
கையகப்படுத்தியுள்ள நிலத்தை விவசாயிகளிடம் 12 வாரங்களுக்குள்
திருப்பித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏழை விவசாயிகளுக்கு
கிடைத்த வெற்றி மட்டுமல்ல. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கிடைத்த மகத்தான
வெற்றியாகும்.
தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment