தொடங்கிய வேலைகள்
இன்னும்
முடிவுபெறாமல்
அப்படியே இருக்கிறது.
அதற்கடுத்ததாய்
காத்திருக்கும் வேலைகள்
எப்பொழுது தொடங்குவதென
வழியறியாமல் திகைக்கிறது
மனம்
திட்டமிட்ட வேலைககள்
முடிக்கவே
இயலாத சுமையின்
பாரம் தாங்காமல்
தவிக்கையில் சட்டென
எதிர்பாராமல்
நிறைவேறி விட்டது
எந்தவொரு
வில்லங்கமுமில்லாமல்
திட்டமிடாத
சிலவேலைகள் மனதிற்கிசைவாய்...!!
*
No comments:
Post a Comment