மெல்ல வளரும் கூட்டுப் புழு.
1.
‘ காலத்தைப் போலக் காயத்தை ஆற்றும் மருந்து
வேறில்லை ‘ என்றும் ‘
‘ காலத்தைக் கனிய அனுமதிக்கும்போது அது நம்மை
அழகழகான பசுஞ்சோலைக்குள் அழைத்துச் செல்லும் ‘ என்றும் ‘ அவருக்கு எழுத முடிய வேண்டும், அவரது எழுத்தக்களின்
ஒவியப்படாம் மென்மேலும் விரிந்து பரவ வேண்டும் ‘ என்றும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு
கூறுகின்றது. நல்ல மனநிலையைத் தோற்றுவிக்கும் இப்படியான வரிகளுடன் ஆதமார்த்தமாக உரையாடும்
அத்தீர்ப்பின் இறுதிச் சொல் ‘ எழுது ‘ எனக் கட்டளையிடுவதாகவும் ‘ எழுதுக ‘ என ஆசிர்வதிப்பதாகவும்
கருதுகிறேன்.
எழுத்தாளர் பெருமாள் முருகன்
- 22-08-2016 அன்று டில்லியில் நடைபெற்ற ‘ கோழையின் பாடல்கள் ‘ கவிதை நூல் வெளியீட்டு
விழாவில் நிகழ்த்திய ஏற்புரை.
2.
தமிழகத்துக் கல்விச் சூழலில் நவீன இலக்கியங்களுகளைப்
பற்றிப் பேச இடமில்லை. தமிழுக்குப் பெரிய இலக்கியப் பாரம்பரியம் உள்ளது. சங்க இலக்கியம்
போன்றவற்றையே அவர்கள் இலக்கியங்களாக மதிக்கிறார்கள். நவீனப் படைப்புகளை அவர்கள் இலக்கியங்களாக
ஏற்றுக் கொள்வதில்லை. நவீன இலக்கியங்கள், இதழ்கள் குறித்தெல்லாம் உரையாடவே கல்விச்
சூழலில் ஆட்கள் இல்லை. இருப்பினும் என்னால் இயன்ற அளவுக்கு என் மாணவர்களுக்கு நவீன
இலக்கியங்களை அறிமுகப்படுத்த நான் தவறியதில்லை.
பெருமாள் முருகன் - பேட்டி -
ஆதாரம் ; காலச்சுவடு – இதழ் – எண் ; 201.
– செப்டம்பர் – 2016.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment