1.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக சாதனை.
ஓரே நேரத்தில் 430 நூல்கள் வெளியீடு.
சாதனைப் படைத்துள்ள பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துக்கள்.
2.
அஞ்சல் துறை புகார்களுக்கு எண் ‘ 1924 ‘
கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்.
எத்தனை பேர் உபயோகிப்பார்கள். புகார் கொடுத்தால் மட்டும் தக்க பதில் கிடைத்து
விடுமா என்ன?
3.
இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்
கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள்.
பிரச்சினையை பெரியதாக்கியதே முதல்வர்தானே. அவர் பேச்சில் ஆரம்பத்தில் ஆணவம்
இருந்தது. இதைப் பயன்படுத்தி யாரோ தூபம் போட்டு கலவரத்தை உண்டாக்கி விட்டார்கள் என்பது தானே உண்மை.
4,
2015 – 16 – காலகட்டத்தில், காவல் துறையினர் மீது மக்கள் கொடுத்திருக்கும்
மனித உரிமை மீறல் புகார்களின் எண்ணிக்கை ; 35,831 ஆகும்.
காவல் துறை ஆட்சியாளர்களின் நண்பன்.
ஆதாரம் ; தி இந்து நாளிதழ் – 13-09-2016.
தகவல் தொகுப்பு : ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment