மகனுடன்
ஆங்கிலத்தில் பேசாதவர்
நாயுடன்
ஆங்கிலத்தில் பேசுகிறார்.
*
சொந்த
மகனையே கடித்து விட்டது
சோறுபோட்டு
வளர்த்த செல்ல நாய்.
*
அபசகுனமாய்
நேரங்கெட்ட வேளையில்
தெருவில்
அழுகின்றது நாய்.
*
போன
வருஷம் நவம்பர் டிசம்பர்லே வெள்ளப்பெருக்கு
இந்ந
வருஷம் நவம்பர் டிசம்பர்லே கள்ளப்பெருக்கு.
*
முதலைகளை
விட்டு விட்டு
மீன்களை
வேட்டையாடுகிறார்கள்.
*
கோடீஸ்வரர்கள்
பாராட்டுகிறார்கள்
தொழிலாளிகள்
சபிக்கிறார்கள்.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment