1.
மல்லையா
இந்தியரா? வெளிநாட்டு பிரஜையா? இருநாட்டில் வசிக்கும் அர்த்தநாரி.
2.
மல்லையாவின்
கடனை தள்ளுபடி செய்து விட்டு, மக்களை பணத்திற்காக
நில்லும்படி
செய்து விட்டார்கள்.
3.
மல்லையா
இந்த நாட்டின் கடைகோடி ஏழைகளில் ஒருவர். அவர் கடனை திரும்ப கட்டமுடியாதவர் என்பதால்,
முழுத்தொகையும் தள்ளுபடி செய்து விட்டார்கள்.
4.
மல்லையாவின்
கடனை தள்ளுபடி செய்யும் வங்கிகள். விவசாயி கடனைக் கட்டவில்லை என்று ஜப்தி செய்கிறார்கள்.
அவனோ தற்கொலை செய்துக் கொள்கிறான்.
5.
மல்லையாவைக்
காப்பாற்றி விட்டு, இந்திய மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது மை ( ய ) அரசு.
6.
மல்லையாக்கள்
யாரும் வங்கியின் வரிசையில் இல்லை.
7.
மல்லையாக்களிடம்
ATM கார்டுகள் இல்லை. ஓவர்டிராப்ட்டுக்கள் தானிருக்கின்றன.
8.
மல்லையாக்களின்
மால்களில்தான் மக்களின் பணம் குவிந்து கிடக்கின்றது.
9.
மல்லையா
சிரிக்கிறார். இந்தியா ஒளிர்கிறது.
*
No comments:
Post a Comment