1.
கருப்பு
பணத்தை வெளியில் கொண்டு வாருங்கள். பாராட்டுகிறோம். ஆனால், யாரிடமிருந்து தொடங்குவது
என்பது தான் கேள்வி.
2.
குறைந்தபட்சம்
இந்தியாவில் எவ்வளவு பேரிடம் கருப்பு பணம் இருக்கிறதென்பது அரசுக்குத் தெரியும். ஆனால்,
உழைப்பாளிகள், தொழிலாளிகள், எழைஎளியவர்கள் இவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?
3.
பணம்
எடுக்க ATM – வரிசையில் நின்று ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தாரே, அவரிடமா கருப்பு
பணம் இருக்கும்?
4.
உங்களுக்கு
வாக்களித்தவர்கள் யார்? என்று எண்ணிப்பாருங்கள். வாக்களித்தவர்கள் வயிற்றைக் கலங்க
வைத்து விட்டீர்களே? அவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?
5.
உலகப்
பொருளாதார வல்லுநர்கள் அறிவார்கள். கருப்பு பணம் எங்கே? எவரிடம், எவ்வளவு இருக்கிறதென்று?
இந்த பாலபாடம் உங்களுக்கும் தெரியும். ஆனாலும்,
இந்திய ஆட்சியாளர்களே இந்திய மக்களை அவமதித்து விட்டீர்கள் என்பதுதான் உச்சம்.
உச்சம். வெட்கம். வெட்கம்.
*
No comments:
Post a Comment