1.
நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை ( Ego ) விடுங்கள்
2.
அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை
விடுங்கள் ( Loose Talk )
3.
எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள்.
( Diplomacy )விட்டுக் கொடுங்கள் ( compromise
)
4.
சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும்
என்பதை உணருங்கள் ( Tolerance )
5.
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம்
உண்டோ,
இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
6.
உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்
கொள்ளுங்கள். ( Flexibility )
7.
மற்றவர்களுக்குரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான
சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். (
Courtesy )
8.
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட
நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
9.
பிரச்சனை ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும்
என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க
முன் வாருங்கள்.
ஆதாரம்
; ஓஷோவின் “ மனம் இறக்கும் கலை ” – நூல்.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment