*
நெடுநாள்
வாழ்ந்ததின் அர்த்தம் சூன்யம்
நொடியில்
உணர்த்தி விடுகிறது மரணம்
*
கழைக்கூத்தை
வேடிக்கைப் பார்க்கிறார்கள்
மன
வக்கிரக் கூத்தாடிகள்.
*
வெண்டைப்பூ கொண்டை ஏறாது
சண்டைகோழி சமாதானம் ஆகாது.
*
அலட்சியம்
வாழ்வை வீழ்த்தும்.
இலட்சியம் வாழ்வை உயர்த்தும்
*
கருணை
மனம் தேட வேண்டியிருக்கிறது
மனிதம்
பொறுமை இழந்து வருகிறது
*
No comments:
Post a Comment