கொய்யா மரக்கிளையில்அமர்ந்து
பழத்தைக் கொறித்து
தின்கிறது
அழகான அணில்பிள்ளை.
வேகமாய் விரைந்து
வந்து
அணிலை விரட்டுகிறது
காகம்.
துள்ளித் துள்ளி
அடுத்தடுத்தக்
கிளைக்குத் தாவியது
வேகமாய்
உர்ரென்று முறைத்த
குரங்கின்
குரல் கேட்டு மீண்டும்
தாவியது.
கையிலிருந்தப்
பப்பாளிப் பழத்தினை
எறிந்துவிட்டு
போட்டிக்கு வந்தத்
தோழனைத் துரத்திய
விரட்டியது
தோழமைக் குரங்கு.
திடீரென யாரோ கல்லெறிகிற
சத்தங்கேட்டச்
சிட்டுக்கள் பறந்தன.
மரத்தின் கீழ்
நின்றிருந்த இரு
சிறுவர்களைக் கண்டதும்
உற்றுப் பார்த்து
நக்கல் செய்து
விலகியோடியது
அணில்பிள்ளைக்.கடித்தப்பழம்
கீழே விழுந்தது.
தாவி எடுத்து
ஊதித் துடைத்தனர்
சிரித்தனர்
அணில் விளையாட்டின்
மௌன
அழகை ரசித்தனர்
சிறுவர்கள்
சிறிது நெரத்தில்
மறைந்தது
அணில்பிள்ளை சிறுவர்கள்
கலைந்தனர்
மணித்துளிகளில்
நிகழ்ந்தச் சந்தோஷத்
தருணத்தின் இன்பத்தை
இழந்தது
தவிக்கின்றது மௌனமாய்
கொய்யா மரம்.
*
No comments:
Post a Comment