*
பேசுபவர்கள் யார்
என்று தெரியவில்லை?
பேசியதும் என்னவென்று
புரியவில்லை.
அவர்களுக்குள்
ஏதோவொரு
ஆழந்தப் பிரச்சினையின்
அடிவேரின் மூலம்
உள்ளுணர்வில் புதைந்திருக்கிறது.
இருவரும் விட்டுக்
கொடுக்காமல்
பேசினார்கள் கோபப்பட்டார்கள்.
யாரும் சமாதானமாகவில்லை
போவோர் வருவோர்
வேடிக்கைப்
பார்க்கிறார்கள்
என்று கூட
அச்சப்படவில்லை
வெட்கப்படவில்லை.
பொதுவிடம் என்ற
பொறுப்பின்றி
மறந்துப் போய்
சண்டையின்
உச்சத்திற்கு நெருங்கிவிட்டார்கள்.
வாய்சத்தம் பெரும்
சத்தமாகியது
யார் விலகிப் போகுவதன்று
தன்முனைப்பு
கூட்டம் அருகில்
நெருங்கி நிற்கிறது
மெல்ல
அவள் விலகி நடந்தாள்
அவனோ
முறைத்து பார்த்தான்.
வெம்மையின்
புழுக்கம் முகம் காட்டியது
உள்
அரங்கில் நடக்க வேண்டடியது
அம்பலத்தில்
வாழ்க்கையே வேடிக்கைப்
பார்த்தலின்
நிகழ்வாக அரங்கேறியது
விரைந்து காற்றின்
விசையில்
நகர்கிறது வெயிலை
மறைத்த மேகம்
*
No comments:
Post a Comment