*
மூத்தவனே, விநாயகா…
உலகை வலம் வந்து
நீதான் வெற்றிப் பெற்று
பழத்தைப் பெற்றாய்.
உன் தம்பி
கோபித்துக் கொண்டு
எங்கோ போகிறேன் என்று
மிரட்டுகிறான் பார்.
அவன் அழலாமா? போகலாமா,
உனக்கு கஷ்டமில்லையா?
அந்தப் பழத்தை
அவனிடம் கொடுத்துச்
சமாதானமாகப் போ…!
உங்களுக்குள்
தகராறு வேண்டாம்?
தாய் சொல் மிக்க
மந்திரமில்லை.
வினைத் தீர்த்தான்
விநாயகன்.
*.
No comments:
Post a Comment