*
கிராமத்திலிருந்து
நகரத்திற்குப்
போனான்.
பிழைப்பதற்கு,
மீண்டும் ஊர்
திரும்பி வந்தான்
உழைப்பதற்கு….!!
*
சாணித் தெளிக்கும்
பெண்ணைப்
பார்த்துவிட்டு
எழுந்து ஒடியது
வேகமாய்
தெரு நாய்…!!.
*
உயரமான மரத்தில்
எத்தனை அழகாக
வரிசையில் போய்
அச்சமின்றி ஏறுகிறது
கட்டெறும்புகள்….!!.
*
No comments:
Post a Comment