*
NA.GA. THURAIVAN'S HAIKU.
*
பூமியின்
இரகசியங்கள்
புலன்களால்
உணர்ந்திடும்
மண்வளம்
புரிந்த வண்டுகள்.
*
பொன் வண்டின்
உலகப்
பொதுமொழி
இன்னிசை
கீதம் “ ரீங்காரம் ”.
*
சைவமா? அசைவமா?
சொல்
வீட்டிற்குள்
வந்த என்
விருந்தாளி
வண்டே…!!
*
உறங்கும்
குழந்தையை
எதற்காகக்
கடித்தாய்?
வண்டின்
வன்குணம்.
*
பயிருக்கு
உரம் போட
மலஉருண்டை
உருட்டி
வரும் வண்டுகள்.
*
No comments:
Post a Comment