*
பூக்களோடு
பேசக் கூடாதென்று
தடை.
வண்டுகளைக்
காதலிக்கக்
கூடாதென்று
தடை.
ஆடைக் கட்டிய
பால் அருந்தக்
கூடாதென்று
தடை.
காக்கைகள்
பானையில் தண்ணீர்
குடிக்கக் கூடாதென்று
தடை.
என் அப்பா
எனக்குப் போட்டத்
தடை.
ஏனென்று தெரியுமா?
யாருக்கேனும்
அதற்கான விடை?.
*
No comments:
Post a Comment