*
ஆறுதலாய்
முகடுகள் இரண்டும்
இறுக்கி
அணைத்தது என்முகம்.
*
என்
கண்ணீரோ உப்பு
உன்
கண்ணீரோ இனிப்பு
*
உடல்
சூட்டின் வெப்பத்தில்
அடங்கியது
கார்த்திகை குளிர்.
*
சிந்தியது
தேன்
பூவை
ருசித்த வண்ணத்துப்பூச்சி
*
குளிரில்
நடுங்கிய பூனைக்கு
அடைக்கலம்
தந்தது படுக்கையறை.
*
நனைந்தப்
பூவிற்கு
முக்காடு
எதற்கு…?
*
No comments:
Post a Comment