டிஜிட்டில்
இந்தியாவின் பணபரிமாற்றம் பற்றி விளக்குகிறார்கள்.
அமைதியாக
கேட்கிறார். அயோத்தி ராமன்.
நீங்கள்
சொல்வது வேறாக இருக்கிறது. நாரதர் சேகரித்து வந்தள்ள செய்தி வேறாக இருக்கிறதே?
அப்படியென்ன
செய்தி நாரதர் கூறினார்.
நீங்கள்
கூறும் செய்தியில் மக்கள் பிரச்சினைப்பற்றி தகவலே இல்லை. நாரதர் கொண்டு வந்துள்ள செய்தி முழுக்க மக்கள் படும் இன்னல்கள் பற்றி தெளிவானதாக
இருக்கிறதே?
இல்லை
அய்யனே! நாரதர் எங்கோ தவறான பகுதிக்குச் சென்று தகவல் சேகரித்துள்ளார்?
அப்படியா,
நாரதர் பொய் சொல்கிறார் என்று கூறுகிறீர்களா?
மன்னிக்கனும்
அய்யனே, நாரதர் அப்படியெல்லாம்…?
மக்கள்
என்னை முழுக்கமுழுக்க மறந்து விட்டார்கள். பணபரிமாற்றம் பற்றித்தான் பேசுகிறார்கள்
என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கென்ன பதி்ல் சொல்லப் போகிறீர்கள்.
இதைப்பற்றி
மிக விரிவாக பிறகு பேசுகிறோம் சுவாமி. எங்களுக்கு கொஞ்சம் அவசரமான வேலை. விடைபெறுகிறோம்
என்று கூறி வணங்கி விட்டு திணறிக் கொண்டு வெளியேறினார்கள்.
*
No comments:
Post a Comment