வாசிப்பில் ரசித்த
வைரவரிகள்.
*
‘’ காதல் என்பது
ஆதிமனிதன் நம்மீது திணித்த இயற்கையான பலவீனம் .”
ஆனால், ஆண்மை நிறைந்த
வாலிபன் ஒருவன் ஆவேசமாய் மறுப்புச் சொன்னான்.
“ காதல் நிகழ்காலத்தையும்
கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் ஒன்றிணைக்கிறது. ”
துயரம் நிரம்பிய
முகத்தோடு பெண் ஒருத்தி கூறினாள்.
“ நரகத்திலிருந்து
வெளிவந்த கொடிய நாகம் நமது உடம்பில் செலுத்திய விஷமே காதல்.
பனித்துனி போலத்
தூய்மையுள்ள அந்த விஷத்தைத் தாகமுற்ற ஆன்மா மகிழ்வோடு பருகுகிறது.
அதைப் பருகி மயங்கியவர்கள்
மெல்ல மெல்ல மடிகிறார்கள்.
“ காதல், குருட்டு அறியாமை, அதனால் இளமை தொடங்குகிறது.
பிறகு, முடிந்துபோகிறது. ”
சிரித்தவாறு மற்றொருவன்
கூறினான்.
“ காதல் ஒரு தெய்வீக
ஞானம்.
அது கடவுளைப் போல
இந்த உலகில் உள்ளவற்றையும் மனிதனையும் பார்க்க வைக்கிறது். ”
ஆதாரம் : கலீல்
கிப்ரானின் “ தத்துவ தரிசனங்கள் ” – பக்கம் 24 – 25.
தமிழில் ” துறவி.
தகவல் ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment