வாசிப்பில் ரசித்த
வைரவரிகள்.
*
கணமோரிடம் விளையாடிட
தினம்
மாறிடும் மனமே
அணை மீறிடும் நதி
போல – பல
வழி
போவது சரியா?
நிலை மாறிடும்
விலை மாதென
அலை
பாய்ந்திடும் மனமே
நலமே பெற, வளம்
மேவிட
புலன்
வென்றிடும் தினமே
பிரிவாயிரம் உருவாகிட
நரி
வேலைகள் புரிவாய்
விரிவாகி உயர்வா
னென
குணங்
காண்பது நலமே.
பொருள் தேடிட,
இருள் மூடிய
குருடாகிய
மனமே
மருள் நீங்கிய
அருள் தேங்கிய
மதியேந்துக
மனமே
விதி தேவதை சதியால்
மதி
பறிபோவது
நிஜமே
நிதி தேவதை அதி
காரத்தில்
நிலை
சாய்வதும் இயல்பே.
தெளிவாயுண்மை உணர்வா
யெனில்
திசையாவையும்
அறிவாய்
வளையாமலும் வழுவாமலும்
வலிவாகிடு
மனமே.
ஆதாரம் ; கவிஞர்.சி.விநாயகமூர்த்தி
– ஒளியின் நெசவு – நூல் – பக்கம். 41.
தகவல் ; ந.க.துறைவன்.
* ,
No comments:
Post a Comment