*
கோடை மழை
கோடி நன்மை.
*
அறைகுறையாய் நனைந்து
ஒரு குடையில் இருவர்.
*
மழையில் நனைந்து
ஒடுகிறார்கள் மனிதர்கள்
மெல்ல நகர்ந்துப்
போகின்றன எருமைகள்.
*
வயல்கள் நிறைய
தண்ணீர்
நன்றி சொல்கின்றன
தவளைகள்.
*
வானம் வெளுத்து
விட்டது
மீண்டும் வருகிறது
மேகக் கூட்டம்.
*
No comments:
Post a Comment