*
தாய் தந்தையரின்
உயிர்த் துளிகள் தானே
நீங்களும் நானும்
மற்றவர்களும்,
மரணம் என்பது
கரு உருவாகும்போதே
ஆயுளை நிர்ணயித்துக் கொள்கிறது.
மரணம் என்ற வார்த்தையிலேயே
வாழ்வின் பரிபூரண
மணம் இருக்கிறது.
மரணம் என்ற வார்த்தையிலேயே
உறவின் உறுத்தல்களால் ஏற்படும்
ரணம் இருக்கிறது.
மரணம் என்ற வார்தை்தையிலேயே
இயற்கைச் சார்ந்த
நீள் ஆயுளோடு வாழும்
” மரம் ”
உள்ளடங்டகியிருக்கிறது.
எத்தனை எத்தனை வார்த்தைகளை
உள்ளிணைத்துக் கொண்டு
மனித வாழ்வின் இறுதி
நாளினை நகர்த்துகிறது… மரணம்.
மரணத்திடம்
மருத்துவ விஞ்ஞானம்
தோற்றுப் போகிறது.
இறுதியில்
இயற்கையே வெல்கிறது.
நம்
அழுகுரல்
இயற்கைக்கும்
கொஞ்சமாவது புரியுமா?
*
No comments:
Post a Comment