*
வெயிலுக்கு இலைகளின்
மறைவில்
இளைப்பாறுகிறது
பறவைகள்.
*
மேலே விண் கீழே
மண்
இரண்டையும் அளக்கிறது
கண்கள்.
*
புல்லுக்கட்டுத்
தூக்கிப் போகிறாள்
புள்ளதாச்சிப்
பெண்.
*
வாங்கிப் போடப்
போடக்
குவிகிறது பொருளாசை.
*
எண்ணி எண்ணிப்
பார்க்கிறான்
மறந்துப் போகிறது
எண்ணிக்கை.
***
No comments:
Post a Comment