*
வண்டுகள்…!! {
கவிதை }
*
இல்லாமல் இல்லை
இங்கு
இருப்பது எல்லாமே.
*
ஊதுபத்தி நறுமணம்
நுகருமா துளசிச்
செடிகள்?.
*
வண்டைத் துரத்துகிறது
வண்டு
பூக்களுக்குச்
சிரிப்பு..
*
கூப்பிட்டவுடன்
வந்து
அருகில் நின்றது
நாய்க்குட்டி
*
பகலில் வழி தெரியாமல்
அலைகின்றன பன்றிகள்.
***
No comments:
Post a Comment