*
எள்ளுருண்டை
என்பது இனிப்புகளில் தனிரகம். எள்ளில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதாலோ,
அல்லது அதில் வைட்டமின்பி1, பி6, தையாமின், நியாஸின், கால்சியம், மெக்னீசியம்
போன்ற எக்கச்கச்ச சத்து இருப்பதாலோ, மற்ற இனிப்பு பலகாரங்களுக்குக் கூடாத ஒரு
பிரத்யேக ருசி எள்ளுருண்டைக்குச் சேரும்.
வெள்ளை எள்ளைக்
காட்டிலும் கருப்பு எள்ளுக்கு ருசி அதிகம். கொஞ்சம் அலசி உலர்த்தி, கால்வாசி ஈரத்தோடு
வாணலியில் போட்டு வறுத்து வெல்லப்பாகில் பிடித்து உருட்டினால் எள்ளுருண்டை தயார். கூடுதல்
வாசனைக்குச் சற்று ஏலம். முடிந்தது.
மூட்டு
வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ஒரு பிரமாதமான மருந்து. தினசரி இரண்டு உருண்டைகள்
சாப்பிட்டு வந்தால் பெரிய நிவாரணம் இருக்கும். ( ரத்த சர்க்கரை அளவு ஏறிவிட்டது
என்றால் நான் பொறுப்பல்ல ) மாதவிடாய் வருகிற நேரம் சில பெண்களுக்கு மார்பக வலி
இருக்கும். உடம்பு திடீரென்று கனமாகிவிட்டாற்போல இருக்கும். தலைவலி, முதுகுப்பக்க
வலி, வயிறு உப்புசம் என்று என்னவாவது ஓர் இம்சை இருக்கும். இதற்கெல்லாம் நல்ல
மருந்து.
ஆதாரம் ; பா.
ராகவன் – ருசியியல் சமையல் பகுதி
தி இந்து –
நாளிதழ் 05-08-2017.
தகவல் ; ந.க.
துறைவன்.
No comments:
Post a Comment