ஓஷோவின்
குட்டிக் கதை.
ஒரு திருடன்
ஒருமுறை அகப்பட்டுக் கொண்டான். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டான். வழக்கை
விசாரித்த நீதிபதிக்கு வியப்பாகிவி்ட்டது. “ நீ அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஓரே
இரவில் ஒன்பது தடவை நுழைந்தாயாமே. அது ஏன்? என்று காரணம் கேட்டார்.
“ எஜமான், வேற
என்ன செய்யறது? பெரிய கடையாச்சே. நான் ஒண்டியாளே சுற்றி – சுற்றி கொள்ளயடிக்க
வேண்டியிருந்தது. ” என்று திருடன் அப்பாவியாகப் பதில் சொன்னான்.
“ ஏன், உனக்கு
கூட்டாளி யாரும் கிடைக்கலியா? ”
“ எசமான், காலம்
ரொம்ப கெட்டப் போச்சுங்க. யாரை கூட்டாளியா சேத்துக்கிறது? எவனை
சேர்த்துக்கிட்டாலும் ஏமாத்தி துரோகம் பண்ணிடுவானுங்க, ஐயா. ”
ஆதாரம் ;
ஓஷோவின் – அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 126
தகவல் ; ந.க.
துறைவன்.
*
No comments:
Post a Comment