கற்பக
மூர்த்தியே கருணை புரிவாய்…!!
*
அற்புதக்
கீர்த்தி வேண்டின்
ஆனந்த
வாழ்க்கை வேண்டின்
நற்பொருள்
குவிதல் வேண்டின்
நலமெலாம்
பெருக வேண்டின்
கற்பக மூத்தி
தெய்வக்
களஞ்சியம்
இருக்கை சென்று
பொற்பதம்
பணிந்து பாரீர்!
பொய்யிலை!
கண்ட உண்மை!
பிள்ளையார்
பட்டி என்னும்
பேரருட்
சுரங்கத்தின் கண்
உள்ளவன்
மலையிற் பூத்த
உருவத்தன்
இயற்கைத் தோன்றல்
தெள்ளிய
மனத்தர்க் கெல்லாம்
திருவருள்
வழங்கும் ஐயன்
கள்ளமில்
பக்தர் தந்தை
கற்பக
மூர்த்தி அன்றே!
--- கவிஞர் கண்ணதாசன்.
*
No comments:
Post a Comment