*
வேலூர்
மாவட்டம் ஆம்பூர் அருகில் இருக்கும் ஆர்மா மலைக் குகையில் இருக்கும் ஓவியங்கள்,
கல்வெட்டுக்கள், செங்கல் கோயில் ஒன்றையும் ஆய்வாளர் பாஸ்கரன் ஆராய்ந்து
இருக்கிறார். 1970 – ல் கிராமவாசிகள் இந்த மலையை “ அரவான் மலை ” என்கிறார்கள்.
அரவன் அல்லது அருகன் என்ற சொல் தீர்த்தங்கரைக் குறிக்கும். ஒரு ஓவியத்தின் பரப்பு
7 மீட்டர் நீளம், அகலம் 3.5 மீட்டர். அது ஒரு தாமரைக் குளத்தின் சித்திரம். அதில்
வாத்துக்கள், பறவைகள், தாமரை இலைகள், மொட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. ஓர் ஓவியத்தில்
ஆடு ஒன்றின் மேல் சவாரி செய்யும் அக்னி. இன்னொரு ஓவியம் எமன், சித்தன்னவாசல் ஓவிய
முறை. இதன் காலம் 10 அல்லது 11-ம் நூற்றாண்டு என்று கணிக்கிறார் ஆய்வாளர். பல்லவர்கள்,
ராஷ்ரகூடர்கள், சோழர்கள் தமக்குள் அதிகாரப் போட்டி நடத்திக் கொண்டிருந்த காலத்தில்
எல்லோரா, ஆர்மா மலை, சித்தன்னவாசல் ஓவியங்கள், ஓவியங்களில் இருக்கும் கலாச்சாரப்
பிணைப்பைக் காட்டுகின்றன. அதோடு, ; கிடக்கட்டும் பதவிச் சண்டை, நாம் ஸ்தாபிப்போம்
கலை ஒற்றுமையை!’ என்கின்றன ஒவியங்கள்.
ஆதாரம் ; பிரபஞ்சன் கட்டுரை - தி இந்து – 30-08-201
நாளிதழ். .
தகவல் ; ந.க.
துறைவன்.
*
No comments:
Post a Comment