ஆசையின்
பின்னால் ஓட்டமா?
*
வாழ்வில் எது
முக்கியம்?
பெயரா, புகழா,
மனநிறைவா?
எப்போது
வாழ்வு அர்த்தமுள்ளதாகும்?
மனிதாபிமானத்துடன்
வாழ்வதிலா?
பணம்
சேர்ப்பதிலா?
வாழ்வில்
துன்பம் தருவது எது?
லாபா, நஷ்டமா?
அதிகமான ஆசை
அநாவசியச் செலவுகளில் முடிகிறது.
அளவுக்கு
மீறிச் சேர்ப்பது அழிவில் கொண்டு விடுகிறது.
போதுமென்ற
மனம் பெற்றிருக்கும்போது
பழிச்சொல்
நம்மைப் பாதிப்பதில்லை.
எடுத்த
காரியத்தை எப்போது நிறுத்த வேண்டும் என்ற
நிதானம்
இருக்கும்போது
ஆபத்துக்கள்
அணுகுவதில்லை.
இவனே,
வாழத்தெரிந்த மனிதன்
காலத்தை
வென்றவன்!.
ஆதாரம் ; சீன
ஞானம் – வாழ்க்கை வெளிச்சம் – நூல்.
மொழிபெயர்ப்பு. எம்.எஸ் உதயமூர்த்தி. –
பக்கம் – 141.
தகவல் ; ந.க. துறைவன்.
*
No comments:
Post a Comment