1.
எல்லா
கவிதைகளும்
மழைக்
குறித்து
பேசுகின்றன
மழை தான்
மனிதனைக்
குறித்து
பேசியதில்லை.
2.
மழையில்
நனைந்து
ஒதுங்க இடம்
தேடி
தவிக்கிறது
பூனை.
3..
மலர்ந்த
மலருக்கு
மாலை வரைதான்
மரியாதை.
4.
எங்கே
கிடைக்கும்
இளைப்பாற
குளிர் நிழல்.
5.
கடுப்பாய்
இருந்தாள்
கலகலப்பானாள்
புதிய
படவையைப்
பாராட்டியபோது!
5.
எல்லோருக்கு
பிடிக்கும்
அந்த
வளையல்
வட்டம்.
6.
மண் வாசம்
உணர்ந்து
அனுபவிக்கிறதோ?
தெரு நாய்.
ந.க. துறைவன்.
No comments:
Post a Comment