காதலினால் மானுடர்க்குக்
கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக்
கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக்
கவிதை யுண்டாம்
கான முண்டாஞ் சிற்பமுதற்
கலைக ளுண்டாம்;
ஆதலினாற் காதல்
செய்வீர் உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத்
தலைமை யின்பம்!
காதலினாற் சாகாம
லிருத்தல் கூடும்,
கவலைபோம், அதனாலே
மரணம் பொய்யாம்.
ஆதாரம் :- பாரதியார்
பாடல்கள் – பக்கம். 496.
ந.க. துறைவன்.
No comments:
Post a Comment