*
அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் ஆகஸ்டிலிருந்து
கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் பெரிய பறங்கிக்காய்களை வைத்து விதவிதமான உருவங்களை
உருவாக்குவார்கள். இதற்கென்று பிரத்யேக கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்த ஆண்டு செய்த
ஒரு பறங்கிக் காய் உருவம் எல்லோரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்திருக்கிறது. காரணம், அதைச்
செய்தது மனிதர்கள் இல்லை. அணில், மேஜையில் ஒரு பறங்கிக் காயை வைத்தவுடன், மரத்திலிருந்து
ஒர் அணில் ஒடி வருகிறது. தன்னுடைய கூர்மையான பற்களால், வேகமாகப் பறங்கிக்காயைச் செதுக்க
ஆரம்பிக்கிறது. இரண்டு கண்கள், மூக்கு, ஒரு வாய் என்று செதுக்கிக் கொண்டிருக்கும்போது,
இன்னோர் அணில் வந்து தொந்தரவு செய்கிறது அதை விரட்டவிட்டபடியே, தன் வேலையை முடித்துவிட்டு
ஒடுகிறது அணில்!.
*
ஆதாரம் ;- தி இந்து – 02-11-2014 – நாளிதழ்
உலக மசாலா – பகுதி – பக்கம் 12.
தகவல் ; - ந.க.துறைவன், வேலூர் – 09.
*
No comments:
Post a Comment