*
மனவிரிசல்களை நொடிக்குள் தீர்த்து
வைக்கின்றது இருவரின் சுகந்த மௌனம்.
*
ஆண் – பெண் அடையாளமே
அழைக்கும் நம் பெயர்கள்.
*
உதயமாகும் புதுபுதுக் கட்சிகள்
உடைந்து உடைந்து வளர்கிறது.
*
குற்றங்களை நியாயப் படுத்துகின்றது
ஓங்கி ஓலிக்கும் பக்திக் குரல்கள்.
*
முன்னும் பின்னும் பின் தொடர்கிறது
என்னை என் நிஜநிழல்.
*
No comments:
Post a Comment