*
பட்டுப் பூச்சி
தோழியே
பக்கம்அ வந்து
சிறகடி
தொட்டுப் பார்க்க
ஆசையே
தோளில் வந்து சிறகடி….
வண்ணப் பூவின்
இதழ்களால்
உன்னை செய்த தாரடி
பண்ணின் ஏழு சுரங்கள்
போல்
பறக்கும் கீதம்
நீயடி!
ஓடி…ஓடி… மலர்களின்
மனதில் அன்பைத்
துவினாய்
பூமி நிறைய பூக்களால்
நந்த வனங்கள் ஆக்கினாய்…!
உன்னைப் போல பறக்கவே
எனக்கும் ஆசை நெஞ்சிலே
சிறகிரண்டு தருவையோ?
பறக்க சொல்லித்
தருவையோ?
*
- ஆதாரம் ;- “
திசை காட்டி ” – எஸ். வைதீஸ்வரன் – நூல் பக்கம் – 39.
ரசித்தவர் ;- ந.க.துறைவன்.
No comments:
Post a Comment