*
குழந்தைகளை
மிரட்டிக் கொண்டிருந்தது
குழந்தைகளும்
விரட்டிக் கொண்டிருந்தார்கள்
கலையவில்லை.
பிறகு, எண்ணெய்
பேப்பரைக்
கட்டித் தொங்கவிட்டார்
அப்பா.
அதில் ஒவ்வொன்றாகப்
போய்
ஒட்டிக் கொண்டுத்
தவித்தன
அந்தக் குழல்விளக்கைச்
சுற்றி
அலைந்தப் பூச்சிகள்.
- அதனை
அதிசயமாக வேடிக்கைப்
பார்த்தார்கள்
அப்பொழுது மெல்ல
அடங்கியது
அப் பூச்சிகளின்
தொல்லை
இனிமேல் இல்லையெனக்
கைக்கொட்டி மகிழ்ந்தக்
குழந்தைகளின் சிரிப்பின்
அலை…!!
*
No comments:
Post a Comment