*
சிந்தனைக்கு விருந்தாகும் இக்கேள்வி – பதில்
– களைப் படித்துப் பாருங்கள்.
நமக்குள் என்ன நிகழ்கிறது என்று நினைத்துப்
யோசியுங்கள்.
*
தேனை விட இனிமையானது எது? வாளை விட கூர்மையானது
எது? விஷத்தை விட உடலில் வேகமாகப் பரவுவது எது? ஒரு நிமிடச் சுகம் எது? முடியாத கடன்
எது? சுடுகாட்டுக்குப் போகும்போது பின்தொடர்கிற வேதனை எது? குடும்பஸ்தனின் தீராத துக்கம்
எது? வாழ்க்கையில் கொடியது எது? தீராத நோய் எது? மறைக்க முடியாத அவமானம் எது?
தயா பதில் சொன்னாள் வரிசையாக:-
*
குழந்தைகளின் தூய அன்பு தேனை விட இனியது.
வாளை விட கூர்மையானது நாக்கு. விஷத்தை விட வேகமாகப் பரவிப் பாதிப்பது கண்திருஷ்டி.
காமத்தின் சந்தோஷம் ஒரு நிமிஷமே நிலைத்திருக்கும். ஏழு நாட்களுக்கு நிலைத்திருக்கும்
சந்தோஷம் கல்யாண வைபோகம். கொடியவனுக்கு விட்டுத் தள்ள முடியாத கடன் மரணம். அவன் சந்ததியின்
கெட்ட நடவடிக்கைகள். ஒருவன் இறந்த பின்பும் பின்தொடரும் குடும்பஸ்தனின் தீராத துக்கம்
மோசமான வேலைக்காரன்தான். தரித்திரம்தான் வாழ்ககையில் கொடியது. தீராத நோய் துஷ்டபுத்தி.
அழிக்க முடியாத மானக்கேடு சந்ததியினருக்கும் ஏற்படுகின்ற களங்கம்.
*
ஆதாரம் : - பிரபல மலையாள எழுத்தாளர்..எம்
டி. வாசுதேவன் நாயர் எழுதிய “ தயா ” – என்ற நூல். மொழிபெயர்ப்பு :- உதயசங்கர் – சசிதரன்.
பக்கம். 26.
உங்களுக்காக வழங்குபவர் : - ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment