சுகவலி….!!
*
உன்
தலைவலிக்குத்
தைலம்
தேய்த்து விட்டேனே
வலி குறைந்து
விட்டதா?
இப்பொழுது
தான்
எனக்கு புரிந்தது
தைல வருடலின்
ஸ்பரிச
சுகத்தை
விரும்புகிறது
உன் சுய
தலைவலி.
வலி சுகமானது
சுகம்
வெட்கமாகது.
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment