*
இந்திய நெடுஞ்சாலை
இரவு நேர உணவகங்களில்
கட்டிலில் அமர்ந்து
ஒய்வாய்
சாப்பிடுகிறார்கள்
வடமாநிலத்திலிருந்து
பயணித்து வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்கள்
மொழி உணர்வைக்
கடந்து
ஒற்றுமையைப் பேணுகிறது
பசி தீர்க்கும்
உணவகங்கள்.
*
No comments:
Post a Comment