*
இன்பம் கண்டு மகிழும்
துன்பம் கண்டு துவளும்
நிலையான மனம்.
*
காற்று, மழை, பெரும் சத்தம்
கண்ணைப் பறிக்கும் மின்னல், எங்கோ
விழுந்திருக்கணும் இடி.
*
உள்ளே சூன்ய தரிசனம்
தில்லை வெளியில் பாதுகாப்பாய்
பொன் வேய்ந்த கூரை.
*
தண்டவாளம் இல்லாத பாதையில்
வேகமாய் ஒடுகின்றன...
இரயில் பூச்சிகள்.
*
நிழல் நின்றிருந்த என்னை
பூக்கள் உதிர்த்து...
*
காற்று, மழை, பெரும் சத்தம்
கண்ணைப் பறிக்கும் மின்னல், எங்கோ
விழுந்திருக்கணும் இடி.
*
ந க துறைவன்.
No comments:
Post a Comment